ஆப்நகரம்

வெற்றிகரமாக முடிந்தது வெளிநாட்டு பயணம்: ஊர் திரும்பிய முதல்வர் பெருமிதம்

13 நாள் அரசு பயணத்தை முடித்து கொண்ட தமிழக முதல்வர் அதிகாலை சென்னை திரும்பினார். தனது பயணம் வெற்றிகரமாக முடிந்ததாகவும், இந்த பயணத்தின் மூலம் 35, 520 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும், தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் முதல்வர் கூறினார்.

Samayam Tamil 10 Sep 2019, 7:38 am
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக , 13 நாட்கள் வெளிநாடு சுற்றுப் பயணம் சென்றிருந்தார். கடந்த மாதம் 28 ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அங்கு தொழில் முதலீட்டார்களையும், தமிழ் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து தமிழ் நாட்டில் தொழில் தொடங்குவதுக்கான சாத்தியக்கூறுகளை அவர்களிடம் எடுத்துறைத்தார்.
Samayam Tamil edapadi-court-jpg_710x400xt


இதன் மூலம் தமிழ் நாட்டில் தொழில் தொடங்க பல நிறுவனங்களுடன், பல்லாயிர ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தனது பயணத்தை முடித்துக் கொண்ட முதல்வர் நேற்று துபாயில் இருந்து புறப்பட்டு அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் முதல்வர் நிருபர்களிடம் கூறியதாவது:

பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இங்கிலாந்தில் 3 முக்கிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் நாட்டில் மருத்து வசதிகள் மேம்படும். அதேபோல் கிங்க்ஸ் மருத்துவமனை இங்கு அமைக்கப்படும். இதில் டெங்கு, மலேரியா கொசுக்கள் ஒழிப்பது தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

அதைதொடர்ந்து அமெரிக்கா சென்று, முதலில் கால்நடைகள் வளர்ப்பை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டது. விரைவில் சேலம் மாவட்டம் தலைவாசலில் பிரம்மாண்டமான கால்நடை பூங்கா அமைக்கப்படும்.

அமெரிக்கா நியூயார்க்கில் ரூ. 2, 750 கோடி மதிப்பில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தகள் போடப்பட்டது. இதன் மூலம் 17 ஆயிரத்து 760 பேருக்கு வேலை கிடைக்கும். இப்படி மொத்தம் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் நாட்டில் 35, 520 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

வெளிநாட்டு வாழ் தமிழர்களை ஒன்றிணைத்து, அவர்கள் தமிழ் நாட்டில் தொழில் தொடங்க வசதியாக யாதும் ஊரே திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. தமிழ் நாட்டில் தொழில் தொடங்க பலர் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். நமது முயற்சியை வெளிநாட்டு வாழ்தமிழர்கள் கைதட்டி ஆர்வாரம் செய்து மகிழ்ச்சியுடம் நமது முயற்சியை வரவேற்றார்கள். அவர்கள் எனக்கு அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அடைய செய்தது. தொடர்ந்து அரசு முறை பயணம் தொடரும்.

லண்டனில் தமிழில் உரையாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றபோதும், அவர்களுக்கு தமிழ் தெரியாது. அதனால் அவர்களுக்கு புரியும் மொழியில் தான் பேச வேண்டும். நமது நோக்கம் தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் எனபதே. அதன் அடிப்படையில் சில இடங்களில் ஆங்கிலத்திலும் பேசினோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அடுத்த செய்தி