ஆப்நகரம்

ஈரானில் கைதான இந்திய மீனவர்கள் - வெளியுறவுத்துறை அமைச்சர் உதவியை நாடும் தமிழக முதல்வர்!

இந்திய மீனவர்கள் மூவரை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உதவியை தமிழக முதலமைச்சர் பழனிசாமி நாடியுள்ளார்.

TIMESOFINDIA.COM 26 Feb 2019, 9:35 pm
ஈரானிய கடற்படையினரால் இந்திய மீனவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் பழனிசாமி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
Samayam Tamil Palaniswami


அதில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள், சவுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இயந்திர மீன்பிடி படகில் மீனவத் தொழிலாளர்களாக வேலைக்குச் சென்றனர். இவர்கள் கடந்த ஜனவரி 2ஆம் தேதி, அந்நாட்டின் தரின் மீன்பிடித் தளத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இதையடுத்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த கொள்ளையர்கள் மீனவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்களை ஈரானின் புஷர் கடற்கரையில் விட்டு விட்டு தப்பிவிட்டனர்.

அந்த மூவரையும் ஈரானிய கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. எனவே இந்திய மீனவர்களை பாதுகாப்பாக விடுவிக்கவும், அவர்களுக்கு சவுதி முதலாளியிடம் இருந்து உரிய சம்பளத்தைப் பெற்றுத் தரவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

அடுத்த செய்தி