ஆப்நகரம்

அண்ணா, ஜெயலலிதாவிற்கு ”பாரத ரத்னா” - பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தல்!

சென்னை: தமிழக அரசியல் தலைவர்களுக்கு “பாரத ரத்னா” விருது வழங்குவது குறித்து, பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 27 Jan 2019, 10:10 pm
மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைய உள்ளது. இதற்காக பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Samayam Tamil PM Modi


விழா முடிந்து செல்லும் போது, பிரதமர் மோடியை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்தார். அப்போது 17 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை பிரதமரிடம் அளித்தார். அதில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

மேகதாது அணை குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்ட வேண்டும்.

கஜா புயல் பாதிப்பிற்கு கூடுதல் நிதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அடுத்த செய்தி