ஆப்நகரம்

24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் மழை உள்ளது

காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி நகருவதால் வட கடலோர தமிழ்நாடு, கடலோர ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

TOI Contributor 14 Nov 2017, 2:27 pm
காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி நகருவதால் வட கடலோர தமிழ்நாடு, கடலோர ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது
Samayam Tamil tamil nadu coastal districts will get rain for another 24 hours
24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் மழை உள்ளது


கடந்தவாரம் தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மறைந்து புதிதாக தென்கிழக்கு வங்க கடலில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று தென் மேற்கு திசையில் நகருவதால் கடந்த 2 நாட்களாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடைவிடாமல் பரவலாக மழை பெய்தது.

இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு பகுதியான தென்மேற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி மேலும் நகர்ந்து செல்கிறது. இதன் காரணமாக வட கடலோர தமிழ்நாடு, கடலோர ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலைமையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் உள்பகுதியில் பெரும்பாலான இடங்களில் வெறும் 1 முதல் 3 செ.மீ., வரை மழையே பெய்தது. அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பகலில் காற்றுடன் பெய்யத் தொடங்கிய மழை இடை இடையே பலமாக கொட்டியது. நேற்று இரவு முதல் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும், இன்றும் மழை இருக்கும் என்று இந்திய வானிலை எச்சரித்துள்ளது.

அடுத்த செய்தி