ஆப்நகரம்

கோழியை காப்பாற்ற சென்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக பலி!

உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவர் ஒருவர் கோழியை காப்பாற்ற சென்று, உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 Jan 2019, 3:21 am
மதுரை: உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவர் ஒருவர் கோழியை காப்பாற்ற சென்று, உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil உசிலம்பட்டி


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், சி. சுரேஷ் (19 வயது). இவர் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர் கிணற்றில் தவறி விழுந்த கோழியை பிடிக்க சென்றதாக அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர். கிணற்றில் பத்திரமாக கயிறு கட்டி இறங்கிய சுரேஷ் கோழியை பிடித்து மேலே இருந்தவர்களிடம் கயிறு மூலம் கொடுத்துள்ளார்.

பின் கிணற்றில் இருந்து கயிறு மூலமாக, சுரேஷ் மேலே வர முயற்சித்துள்ளார். அப்போது பாதி வழியில் கயிறு அறுந்துள்ளது. இதனால் சுரேஷ் தவறி மீண்டும் கிணற்றுக்குள் விழுந்தார். அப்போது அவர் கிணற்றின் சுற்றுச்சுவறு மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.
அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எழுமலை போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி