ஆப்நகரம்

தமிழகத்தில் அதிகமாகும் கொரோனா பலி..! ஊரடங்கிலும் இப்படியா?

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 29 May 2020, 6:47 pm
தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது, அதன்படி, இன்று மேலும் 874 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 141 பேர் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் வந்த தமிழர்கள். ஆக மொத்தம் பாதிப்பு எண்ணிக்கையானது இன்றோடு, 20 ஆயிரத்து 246 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil தமிழகத்தில் அதிகமாகும் கொரோனா பலி


இன்று ஒரே நாளில் 765 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 11,313 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று மேலும் 9 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.


இன்று சென்னையில் அதிகபட்சமாக 618 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 13,362 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுக்க இன்றைய நாளில் சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 8,776 என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி