ஆப்நகரம்

கொடூர கொரோனா: தமிழகத்தில் இன்று 147 பேர் பலி... 20 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒருநாள் கொரோனா பலி எண்ணிக்கை நூறை கடந்துள்ளது.

Samayam Tamil 1 May 2021, 9:48 pm
தமிழகத்தில் மேலும் 19,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 11,86,344 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 17,164 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 10,54,746 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Samayam Tamil file pic


இன்று இதுவரை இல்லாத அளவுக்கு மேலும் 147 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 14,193 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 92; தனியார் மருத்துவமனையில் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 5829 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 339797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 4791 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் இன்று 1257 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 79669 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 71658 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 723 பேர் பலியாகியுள்ளனர்.

எம்ஜிஆரின் பாடலை மேற்கோள்காட்டி ஈபிஎஸ் - ஓபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு..!

செங்கல்பட்டில் இன்று 1445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 81477 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 72353 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 954 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2,24,24,611 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,51,452 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 1,17,405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடுத்த செய்தி