ஆப்நகரம்

தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறையாகப் பெண் கொடுத்த பிளாஸ்மா தானம்!

தன்னால் இயன்ற உதவியை செய்து வரலாற்றில் இடம் பிடித்த பெண்... கொரோனாவை வென்று பிறருக்கு உதவும் வகையில் இந்த பெண் செய்த செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது...

Samayam Tamil 11 May 2020, 11:24 pm
கொரோனா வைரஸ் தொற்று நாட்டிற்கே பெரும் சவாலாக உள்ளது. இதுவரை இந்த நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தற்கும் விரட்டுவதற்கும் எந்தவித மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
Samayam Tamil தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறையாகப் பெண் கொடுத்த பிளாஸ்மா தானம்!
தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறையாகப் பெண் கொடுத்த பிளாஸ்மா தானம்!


இந்த சூழலில் மக்களுக்கு கொரோனா பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க நம்பிக்கை அளிக்கும் விஷயமாகத் திகழ்வது பிளாஸ்மா சிகிச்சை முறை மட்டுமே.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நபரிடமிருந்து பெறப்படும் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா பிரிக்கப்பட்டு, அந்த பிளாஸ்மாக்களை பாதிப்பிற்கு ஆளான நபர்களுக்கு வழங்கும் முறை.

இப்படிச் செய்வதால் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள நபரின் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து கொரோனா வைரசுடன் சண்டைபோட்டு அதை வெற்றிக் கொல்லும்.

இந்த பிளாஸ்மா சிகிச்சைக்காக இதுவரை மாநிலத்தில் குணமடைந்த பலர் தங்கள் ரத்தத்தைத் தானமாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக கொரோனாவிலிருந்து மீண்ட பெண் ஒருவர் பிளாஸ்மா சிகிச்சைக்காக தனது ரத்தத்தைத் தானமாக வழங்கியுள்ளார்.

சிஎம் கேட்டது 2 ஆயிரம் கோடி, வந்தது 335 கோடி, அலகளிக்கும் மோடி!

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களில் பல ஆண்கள் இதுவரை பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவி வந்த நிலையில் முதல் முறையாகச் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பெண் ஒருவர் உதவியது சமூகத்தில் வரவேற்கத்தக்க விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தவிஹித் ஜமாத் டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்த இஸ்லாமியச் சகோதரர்கள் பலர் நோய்ப் பாதிப்பிலிருந்து மீண்டவுடன் தாமாக முன் வந்து இதைச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி