ஆப்நகரம்

ஏப்ரல் 05: தமிழகத்தில் கொரோனா புயல் விட்டு விட்டு அடிக்கிது..!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு மாற்றம் டிஸ்சார்ஜ் நிலவரம்

Samayam Tamil 5 Apr 2021, 8:46 pm
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,672 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,03,479 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 37 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கும் உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil file pic


தமிழகத்தில் தற்போது 23,777 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 1335 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 255074 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 241808 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4275 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 376 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60534 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 57404 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 694 பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 310 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 57859 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 54709 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 828 பேர் பலியாகியுள்ளனர்.

திமுக கூட்டணி இவ்ளோ இடங்களை கைப்பற்றுமாம்: துல்லிய கருத்துக் கணிப்பு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 79,442 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,96,85,598 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,842 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,66,913 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,789 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி