ஆப்நகரம்

செப்டம்பர் 26: கொரோனாவில் தினம்தினம் ஒரே அளவில் பாதிப்பு..! குறையாத தலைவலி

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 35,490 பேர் இருந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 26 Sep 2021, 9:13 pm
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,57,266 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 17,285 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Samayam Tamil representative image


சென்னையில் மட்டும் இன்று 190 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 549088 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 538537 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8464 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 196 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 241754 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 237350 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2330
பேர் பலியாகியுள்ளனர்.


செங்கல்பட்டில் இன்று 118 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,68,317 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,64,706 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,468
பேர் பலியாகியுள்ளனர்.

மக்கள் எதை நம்பி வாக்களித்தார்களோ அதை இன்னும் நிறைவேற்றவில்லை - ஓபிஎஸ்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,54,245 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 4,63,86,232 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,658 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 26,04,491 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 35,490 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி