ஆப்நகரம்

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்..! 2 நிமிட வாசிப்பில்

தமிழகத்தில் இன்றைய மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, இறப்பு மற்றும் டிஸ்சார்ஜ் நிலவரத்தை காண்போம்

Samayam Tamil 23 Jan 2021, 9:25 pm
தமிழகத்தில் இன்றைய (23-01-2021) கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக பாப்போம்.
Samayam Tamil file pic


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 586 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,34,171 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 26 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கும் உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போது 4,984 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 153 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 230026 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 224192 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4085 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53966 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 52802 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 666 பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51206 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 50065 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 762 பேர் பலியாகியுள்ளனர்.

'மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிகிறது' - கமல்

குறைந்த பட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இங்கு 2262 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2238 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 3 பேர் இங்கு சிகிச்சையில் உள்ளனர்.

அதுபோல குறைந்தபட்சமாக அரியலூரில் இன்று 2 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இங்கு 4674 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 9 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 62,849 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,52,67,910 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 673 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,16,878 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,309 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி