ஆப்நகரம்

தமிழகத்தில் இன்று 811 பேருக்கு கொரோனா..! மொத்தம் 8,03,328 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரத்தை குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 6 Jan 2021, 11:16 pm
தமிழகத்தில் இன்றைய (06-01-2021) கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக பாப்போம்.
Samayam Tamil file pic


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 811 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,23,181 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 24 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கும் உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போது 7,665 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 228 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 226700 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 226937 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2327 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 87 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52821 ஆக அதிகரித்துள்ளது. 51418 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 658 பேர் பலியாகியுள்ளனர்.


குறைந்தபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்குகூட கொரோனா உறுதியாகவில்லை. இதுவரை இங்கு 2258 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2235 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 2 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அதுபோல குறைந்தபட்சமாக அரியலூரில் இன்று 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இங்கு 4644 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 11 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ரஜினி அரசியல் பின்வாங்கல்: ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 63,268 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,42,61,173 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 943 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,03,328 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,188 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி