ஆப்நகரம்

கொரோனா: உங்கள் மாவட்டங்களின் இன்றைய நிலவரம் என்ன?

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Samayam Tamil 11 Jul 2020, 7:00 pm
தமிழகத்தில் இன்று மேலும் 3965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil chennai coronavirus


தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது சென்னையில் அதி தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது சற்று குறைந்து காணப்படுகிறது. அதாவது , 2 ஆயிரமாக இருந்து வந்த எண்ணிக்கை சமீப நாட்களில் ஆயிரம் என்ற கணக்கில் குறைந்துள்ளது. இன்றும் சென்னையில் 1,185 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,989 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மாநில அளவில் 3,591 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 85,915 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 69 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமைப்படுத்தப்பட்டும் 46,410 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 14 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்..! முக்கிய முடிவுகள் வெளியாகும் என தகவல்...

கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகரித்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. அதே சமயம், சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மாநில அளவில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்தாலும், பலி எண்ணிக்கை 60 க்கும் மேல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி