ஆப்நகரம்

தமிழ்நாட்டில் இன்று 7,427 பேருக்கு கொரோனா தொற்று..!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது.

Samayam Tamil 21 Jun 2021, 8:58 pm
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,29,924 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


மாநிலத்தில் தற்போது 61,329 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 439 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 529650 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 520236 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8071 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 891 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 213384 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 201907 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1911 பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 310 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 154428 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 150202 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2317 பேர் பலியாகியுள்ளனர்.

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: ஸ்டாலின் பேசியது என்ன?

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,65,829 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 3,05,23,529 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 15,281 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 23,37,209 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 189 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 31,386 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி