ஆப்நகரம்

Cyclone Fani: ஃபானி புயல் நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறும் – வானிலை ஆய்வு மையம்

ஃபானி புயல் நாளை அதிதீவிரமாக வலுப்பெறும் என்றும், புயல் காரணமாக மீனவா்கள் யாரும் வருகின்ற 1ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 28 Apr 2019, 1:37 pm
ஃபானி புயல் தமிழகத்தில் கரையை கடக்க வாய்ப்பில்லை என்ற நிலையில், புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
Samayam Tamil Boats 123


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்திரன் இன்று செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், சென்னையின் தென்கிழக்கே 1,050 கி.மீ. தொலைவில் ஃபானி புயல் நிலை கொண்டுள்ளது. புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும். ஃபானி புயல் இன்று இரவு தீவிர புயலாக மாறி, நாளை அதிதீவிர புயலாக மாறும் என்று கூறியுள்ளாா்.

மேலும் அவா் கூறுகையில், புயல் காரணமாக வருகின்ற 1ம் தேதி வரை வடமேற்கு திசையில் நகா்ந்து, பின்னா் வடகிழக்கு திரை நோக்கி நகரும். ஃபானி புயல் தமிழக கடற்கரையை கடக்க வாய்ப்பு இல்லை. ஃபானி புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. வடதமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மீனவா்கள், இன்று தென்கிழக்குப் பகுதிக்கும் ஏப்ரல் 29, 30, மே 1 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

அடுத்த செய்தி