ஆப்நகரம்

தமிழகத்தில் 90 சதவீத அணைகள் முழு கொள்ளளவை எட்டின: பொதுப்பணித்துறை

தென்மேற்கு பருவமழை மூலம் வழக்கத்தை விட குறைந்தளவிலான மழைப்பொலிவு இருந்தாலும், தமிழ் நாட்டில் உள்ள 90 சதவீத அணைகள் முழு கொள்ளவை எட்டியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 19 Aug 2018, 10:35 am
தென்மேற்கு பருவமழை மூலம் வழக்கத்தை விட குறைந்தளவிலான மழைப்பொலிவு இருந்தாலும், தமிழ் நாட்டில் உள்ள 90 சதவீத அணைகள் முழு கொள்ளவை எட்டியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil Tamil-image-1078
நிரம்பி வழியும் தமிழக அணைகள்: தமிழக அரசு


கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, சேலம் மேட்டூர் அணை, பவானி சாகர் ஆணை உள்ளிட்டவை முழு கொள்ளவை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை வரை கிடைக்கப்பெற்ற மழை பொழிவின் மூலம் மேட்டூர் காவிரி அணை 1.72 லட்சம் கனஅடியையும், அதேபோல பவானி சாகர் அணை47,168 கனஅடியையும் எட்டியுள்ளன.

கர்நாடகாவின் கபிணி மற்றும் கிருஷ்ணராஜா சாகர் அணைகள் மூலம் சுமார் 1.7 லட்சம் கனஅடி நீர் கிடைத்துள்ளது. மேலும் கரூரில் உள்ள மாயனூர் தடுப்பணை 2.35 லட்சம் கனஅடி நீரை எட்டியுள்ளது.

இது தொடர்பாக தமிழக பொதுப் பணித்துறை அலுவலர் கூறும்போது, எல்லா அணைகளும், ஏரிகள், குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் ஆகியவை அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

மேலும், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள வீராணம் ஏரி 7.35 அடியிலிருந்து 8.5 அடியை எட்டியுள்ளது. தென் தமிழ்நாட்டின் நீர் ஆதாரமாக உள்ள முல்லைப்பெரியாறு அணை 141.15 அடியை எட்டியுள்ளது.

கடந்த சனிக்கிழமை வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகத்தில் அதிகப்பட்சமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 410 சதவீத அளவு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதற்கு பிறகு தேனியில் 363 சதவீதமும் மற்றும் திருநெல்வேலியில் 191 சதவீதமும் மழைப்பொழிவு பதிவுயாகியுள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஈரோடு மற்றும் நாமக்கல் பகுதிகளுக்கு இன்று சென்றுள்ள முதல்வர் எட்பாடி பழனிசாமி, அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

அடுத்த செய்தி