ஆப்நகரம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு ஓ.பி.எஸ். கண்டனம்

“நாம் எப்போதும் வன்முறையையும் பயங்கரவாதத் தாக்குல்களையும் கண்டித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” எனவும் கூறினார்.

Samayam Tamil 21 Apr 2019, 5:18 pm
இலங்கையின் தேவாலயம், நட்சத்திர விடுதி உள்ளிட்ட 8 பகுதிகளில் தொடா் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதற்கு தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil D4quAOlWsAIQ0d1


இலங்கையின் தேவாலயம், நட்சத்திர விடுதி உள்ளிட்ட 8 பகுதிகளில் தொடா் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில் அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்புகளில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.


இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடைபெற்ற கொடூர தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், “நாம் எப்போதும் வன்முறையையும் பயங்கரவாதத் தாக்குல்களையும் கண்டித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” எனவும் கூறினார்.

அடுத்த செய்தி