ஆப்நகரம்

Telangana Governor: பதவியேற்பு விழாவில் நான் இல்லாமலா? விமானம் மூலம் புறப்பட தயாரான ஓபிஎஸ்!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெலங்கானாவில் நடைபெறும் ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க புறப்பட உள்ளார்.

Samayam Tamil 6 Sep 2019, 2:30 pm
தமிழகத்தின் பாஜக மாநில தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்திரராஜன். இவரை தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil OPS


முன்னதாக குடியரசுத் தலைவர் ஆணையை, தமிழிசையிடம் தெலங்கானா ஆளுநர் மாளிகை ஆணையர் அளித்தார். இதையடுத்து அவர் வரும் 8ஆம் தேதி ஆளுநராக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு- முழு கொள்ளளவை எட்டுமா? எட்டாதா?

தமிழிசைக்கு தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் தமிழிசை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செல்கிறார். இவர் நாளை இரவு விமானம் மூலம் ஐதராபாத் புறப்படுகிறார்.

வரும் 9-ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்!

காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து, பாஜகவால் ஈர்க்கப்பட்டு தனது கடின உழைப்பால் இத்தகைய உயரிய நிலையை அடைந்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த போது, கடுமையாக விமர்சனங்களுக்கு ஆளானார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் கேலி செய்யப்பட்டார். இவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு, தைரியத்துடன் கடந்து சென்றார். தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு, கட்சி பேதமின்றி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தலுக்கு பின் ரஜினியின் கொடிதான் பறக்கும்.! - கராத்தே தியாகராஜன் பகீர்..!

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தெலங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக சென்றாலும், நான் என்றும் தமிழகத்தின் சகோதரி தான். தமிழக நலனுக்கு என்றும் எனது ஒத்துழைப்பை வழங்குவேன் என்று கூறியிருந்தார்.

அடுத்த செய்தி