ஆப்நகரம்

14 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகம் வளர்ச்சி இலக்குகளை அடைந்துவிட்டது- முதல்வர் பழனிசாமி

2030ம் ஆண்டில் அடையவேண்டிய வளர்ச்சி இலக்குகளை தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்கு முன்னேர அடைந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

Samayam Tamil 15 Sep 2018, 11:58 pm
2030ம் ஆண்டில் அடையவேண்டிய வளர்ச்சி இலக்குகளை தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்கு முன்னேர அடைந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
Samayam Tamil edapadi-palanasami455-15-1494841933_16183
தமிழகம் வளர்ச்சி நிலையை அடைந்துவிட்டது- முதல்வர் பழனிசாமி


காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதை திறந்துவைத்து, பல புதிய திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

அப்போது பேசிய அவர், செங்கல்பட்டில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகச்சைகளுக்கான முன்னெடுப்பு திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழு தடுப்பணைகள் கட்டப்பட்டு, மழை நீர் கடலில் கலப்பது தடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்கு முன்னதாக, காஞ்சிபுரம் அண்ணா நினைவில்லத்தில் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 110வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

அடுத்த செய்தி