ஆப்நகரம்

நாஞ்சில் சம்பத்துக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் திடீர் அனுமதி!

நாஞ்சில் சம்பத் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 25 Jan 2023, 10:47 am
இலக்கிய மேடைகள், பட்டிமன்ற மேடைகள், அரசியல் மேடைகள் மூலம் தன்னுடைய பேச்சாற்றலால் தமிழ்நாட்டு மக்களை கவர்ந்த கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளையை சேர்ந்த நாஞ்சில் சம்பத் மூளையில் ரத்தக் கசிவு காரணமாக, வலிப்பு நோய் ஏற்பட்டு ஞாபக மறதி உருவாகி கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil nanjil sampath


நாஞ்சில் சம்பத் உடல் நலம் சரியில்லாமல் இருப்பது அரசியல் வட்டாரங்களிலும், இலக்கிய உலகிலும், மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மணக்காவிளையை பகுதியை சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். திமுக, மதிமுக, அதனை தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் முக்கிய பிரதிநிதியாக இருந்து அரசியல் பணியாற்றியவர்.
இது எங்கள் தேர்தல் இல்லை: ஒதுங்கிக் கொண்ட அண்ணாமலை
தமிழ்நாட்டில் மேடை பேச்சுகளில் ஒரு முன்னிலை பேச்சாளராக இருந்து வருகிறார். குறிப்பாக பட்டிமன்றங்களாக இருந்தாலும் சரி இலக்கிய மேடையாக இருந்தாலும் சரி அரசியல் மேடையாக இருந்தால் சரி தன்னுடைய பேச்சாற்றலால் தமிழக மக்களை வசப்படுத்துபவர் நாஞ்சில் சம்பத்.

சென்னையில் இருந்த அவர் ரயில் மூலம் இரண்டு தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் வந்தார். அதன் பின்னர் உடல் நலம் சரியில்லாததால் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். மூளையில் ரத்த கசிவு காரணமாக வலிப்பு ஏற்பட்டு ஞாபகம் மறதியும் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த இந்து அமைப்பு!
சுயநினைவு இல்லாமல் இருக்கும் நாஞ்சில் சம்பத்தை கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் உரிய ஞாபகத் திறன் வர மூன்று நாட்கள் ஆகும் என கூறியிருக்கிறார்கள். நாஞ்சில் சம்பத் உடல் நலம் சரியில்லாமல் இருப்பது அரசியல் வட்டாரங்களிலும் சரி இலக்கிய உலகிலும் சரி மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி