ஆப்நகரம்

O Panneerselvam: மீனவர்கள் கைது: அமைச்சருக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்!

மீனவர்கள் கைது தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

Samayam Tamil 5 Jul 2022, 1:35 pm
ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மீனவர்கள் கைது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil ops


அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு எழுதியுள்ள அந்த கடிதத்தில், “கடந்த 03-07-2022 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 12 இந்திய மீனவர்கள் இரண்டு மாத மீன்பிடித் தடைக்குப் பிறகு அவர்களின் பாரம்பரிய கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் அவர்களது படகுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

மீனவர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களின் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்க விடாமல் தடுக்கும் இலங்கை கடற்படையின் நோக்கம் மிகவும் வெளிப்படையானது.

அதிமுகவில் மும்முனைப் போட்டி: ஓபிஎஸ், சசிகலாவுக்கு டஃப் கொடுக்கும் எடப்பாடி!

இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை மீனவர்கள் மனதில் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினையில் உங்களது அன்பான தலையீட்டைக் கோர விரும்புவதுடன், 12 இந்திய மீனவர்களையும் அவர்களது இயந்திரப் படகுகளையும் இலங்கை அரசாங்கம் விடுவிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு: விசாரணை எப்போது தெரியுமா?
ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறிவருகின்றனர். ஆனால் ஓ.பன்னீர் செல்வமோ கட்சி விதிப்படி நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என கூறிவருகிறார். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருப்பது கவனம் பெற்று வருகிறது.

அடுத்த செய்தி