ஆப்நகரம்

இலங்கை கடற்படை அத்துமீறல் : தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!

ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.

TOI Contributor 7 Jul 2017, 12:13 am
புதுக்கோட்டை: ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.
Samayam Tamil tamil nadu fishers arrested by sri lankankan marine police
இலங்கை கடற்படை அத்துமீறல் : தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!


புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சங்கருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் கணேஷ், மதன், பூபாலன், சதீஸ், அர்ஜூனன் ஆகியோர் 33 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்தனர். இவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தவிர, கோட்டைப்பட்டினத்தில் இருந்து 35 நாட்டிகல் தொலைவில் சோயுபு என்பவரின் விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகமுத்து, அய்யாமுத்து, ராமமூர்த்தி ஆகியோரை கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர்கள் படகு மூழ்கடிக்கப்பட்டது. இதில் சிக்கி கடலில் தத்தளித்த நான்கு மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

tamil nadu fishers arrested by sri lankankan marine police

அடுத்த செய்தி