ஆப்நகரம்

உணவுத் துறை அமைச்சருக்கு கொரோனா!

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Jan 2021, 3:32 pm
கொரோனா வைரஸின் கோர தாண்டவம் ஒரு ஆண்டை கடந்தும் முடிவுக்கு வரவில்லை. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிந்தால் மட்டுமே தீர்வு எட்டப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது பல நிறுவனங்கள் தடுப்பூசிகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. ஆனால் அதற்குள் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
Samayam Tamil kamaraj


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முன்பைவிட சற்று குறைந்தாலும் முழுமையாக பாதிப்பு இல்லாமல் ஆகிவிடவில்லை. கொரோனாவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பணியாளர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எம்.பி, எம்.எல்.ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பலர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜுக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சசிகலா விடுதலை: பாஜக போடும் பிளான், டென்ஷனில் எடப்பாடி

கொரோனா உறுதியானதை அடுத்து அமைச்சர் காமராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி