ஆப்நகரம்

நல்ல ஆட்சி நடப்பதால்தான் தினமும் மழை பெய்கிறது: செங்கோட்டையன்

“தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான நல்ல ஆட்சி நடைபெறுகிறது. அதனால்தான் தினமும் மழை பெய்கிறது. விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.”

Samayam Tamil 21 Oct 2018, 12:34 pm
தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடப்பதால்தான் தினமும் மழை பெய்கிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
Samayam Tamil Tamil_News_large_1775152


ஈரோடு மாவட்டம் கோபி பெரியார் திடலில் அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழாவை பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான நல்ல ஆட்சி நடைபெறுகிறது. அதனால்தான் தினமும் மழை பெய்கிறது. விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.

தமிழக கல்வித்துறையில் வரும் மார்ச் மாதத்திற்குள் பல மாற்றங்கள் கொண்டுவரப்படும். 3,000 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். 12ஆம் வகுப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பை உருவாக்கும் கல்வி வழங்கப்படும். என்றும் அவர் குறிப்பிட்டார்.

1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளை மிஞ்சும் விதமாக சீருடைகள் மாற்றம் செய்யப்படும். என அறிவித்த அவர், கோபியில் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளதாவும் அத்தாணி - சத்தி சாலை, ஈரோடு - நீலகிரி சாலை, கோபி -பெருமாநல்லூர் சாலை ஆகியவை நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படும் என்றும் கூறினார்.

அடுத்த செய்தி