ஆப்நகரம்

தமிழகத்தின் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் கடற்பரப்பில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால தென் தமிழக பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 24 Aug 2018, 12:20 pm
தமிழகத்தின் கடற்பரப்பில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால தென் தமிழக பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil 1238964563_bacf4600b7
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை- வானிலை மையம்


சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை சாரல் முதல் மிதமான மழை பெய்து வந்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளான திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இருந்தது.

வட தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாகவும், தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வட தமிழகம் பகுதிகளில் இன்று காலை மழை பெய்ததை தொடர்ந்து இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தவிர தென்மேற்கு பருவ மழை காரணமாக தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும்.

அடுத்த செய்தி