ஆப்நகரம்

இந்த துறைக்கு மட்டும் ரூ.37,000 கோடியை வாரி இறைத்த தமிழக அரசு - பயன் தருமா...!

துறை சார்ந்த ஒதுக்கீடு குறித்து பேசுகையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த விஷயம் குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 7 Aug 2019, 11:04 am
தமிழக அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மற்றும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் ஆகியோர் இணைந்து விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
Samayam Tamil OPS


இதில் முஸ்லீம் மகளிர் சங்கங்களைச் சேர்ந்த 500 பேருக்கு தலா ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Also Read: கருணாநிதிக்காக இப்படியொரு பிரம்மாண்டம்; சென்னையில் இன்று திறப்பு விழா!

ஆட்சியர் தலைமை தாங்கிய நிலையில், துணை முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசிற்கு கிடைக்கும் ஒட்டுமொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு கல்விக்கு செலவிடப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது ஆண்டிற்கு ரூ.37,000 கோடி கல்விக்கு ஒதுக்கப்படுகிறது.

Also Read: இளைஞர்களின் பாணியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மழை நீர் சேமிப்பு சவால்!

இதன்மூலம் மாணவ, மாணவிகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்வியின் தரம் உயர்த்துதல், மாணவர் சேர்க்கை ஊக்கப்படுத்துதல் போன்றவையும் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார்.

இவ்வளவு பெரிய தொகையின் முழு பயனும் தமிழக மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் இடையில் அரசியல் கட்சியினர் சுரண்டலில் ஈடுபட்டால், தமிழக கல்வி பெரிதும் பாதிக்கும் என்று கூறுகின்றனர்.

Also Read: இனி 10 ரூபாயில் மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்குச் செல்லலாம்!

அடுத்த செய்தி