ஆப்நகரம்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் நிவாரண நிதி ரெடி: வாங்க தயாராகுங்க மக்களே!!

கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 1,000 ரூபாய், வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது.

Samayam Tamil 26 Mar 2020, 8:40 pm
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
Samayam Tamil ration card holders


இதனால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, அரிசி வாங்கும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கு தலா 1,000 ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.

மேலும், ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவையும் நுகர்வோருக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் முதல்வர் தன் அறிவிப்பில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான அரசாணையும் மார்ச் 23 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது.

தமிழகத்தில் இயங்கும் அத்தியாவசிய சேவை முழு விவரம் இதோ..!

இதையடுத்து, 1,000 ரூபாய் நிவாரண நிதி, ஏப்ரல் மாதத்துக்கான இலவச ரேஷன் பொருள்கள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து கூட்டுறவுத் துறை இன்று அறிவி்க்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் நிவாரண நிதி, வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை அளிக்கப்படும். அத்துடன் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருள்களும் இலவசமாக அளிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரணம் 1,000 ரூபாயை ரேஷன் அட்டைதாரர்கள் பெறுவது எப்படி?

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் முறையில் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி