ஆப்நகரம்

தமிழக அரசு வாங்கியுள்ள ரேபிட் டெஸ்ட் கருவியின் விலை எவ்வளவு?

கொரோனா பரிசோதனைக்காக தமிழக அரசு வாங்கியுள்ள ரேபிட் டெஸ்ட் கருவியின் விலையை அரசு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 18 Apr 2020, 7:51 pm
சீனாவிடம் இருந்து தமிழக அரசு ரேபிட் டெஸ்ட் கருவிகளை கொள்முதல் செய்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட இத்தனை நாட்களுக்கு பிறகு ரேபிட் டெஸ்ட் கருவிகள் நாட்டுக்குள் வந்ததற்கு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் கடும் கண்டங்களை தெரிவித்து வரும் சூழலில் அதன் விலை குறித்த விவரங்களை அரசு வெளியிடவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.
Samayam Tamil ரேபிட் டெஸ்ட் கருவியின் விலை



அதேபோல இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் அதே கேள்வியை எழுப்பினர். அதற்கு தமிழக அரசு சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

திங்கள் முதல் நாடு எப்படி இருக்கும்? அலுவலக கட்டுப்பாடுகள் என்ன?

அதாவது ஒரு ரேபிட் டெஸ்ட் கருவியை ரூ. 600க்கு அரசு சீனாவிடம் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழக அரசு ஆர்டர் செய்ததில் தற்போது 24 ஆயிரம் கருவிகள் வந்துள்ளன. மத்திய அரசு சார்பில் 12 ஆயிரம் கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனால் கூடுதலாக 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை மத்திய அரசு வழங்கவேண்டும் என முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி