ஆப்நகரம்

தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம்- கோரிக்கைகளை பரிசீலிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்!

தமிழகத்தில் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை நியமித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 27 Aug 2019, 8:18 pm
தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, அரசாணைப்படி கூடுதல் ஊதியத்தை உயர்த்தி வழங்குதல், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50% ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கும்.
Samayam Tamil Govt Protest


தங்கள் தரப்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த 23ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவர்களின் போராட்டத்திற்கு திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன.

இவங்க தான் அந்த 27 பேர்; இனி டிவி விவாதங்களில் வெளுத்துக் கட்டப் போகும் தமிழக பாஜக!

அதேசமயம் நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் போராட்டத்தை தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழை கொட்டப் போகிறது!!

சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி செந்தில்ராஜை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை- நாமக்கல் அருகே அதிர்ச்சி!

இதன்மூலம் மருத்துவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி