ஆப்நகரம்

பெற்றோரே நீங்க சொல்லுங்க... பள்ளிகள எப்போ திறக்கலாம்? -தமிழக அரசு!

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து, மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 2 Jun 2020, 12:40 am
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்திலும் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதுதான் வழக்கம்.
Samayam Tamil school reopen


ஆனால், இந்தமுறை கொரோனா அச்சம் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இங்கு கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலை நீடித்து வருவதால், தற்போதைய நிலையில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் மாதமும், ஆறாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதமும் பள்ளிகளை திறக்க அரச திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

தமிழகத்தில் ஷிப்ட் முறையில் பள்ளிகளை இயக்கத் திட்டம்!!

அதேசமயம். ஒரு கல்வியாண்டில் குறைந்தபட்சம் 210 நாள்கள் பள்ளிகள் இயங்க வேண்டியது அவசியம். இதனை கருத்தில் கொண்டு பார்த்தால், நடப்பு கல்வியாண்டில் (2020-21) ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டால், குறைந்தபட்ச வேலை நாட்களை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்வது கடினம்.

இதன் காரணமாக, முன்கூட்டியே ஜூலை மாதத்தில் பள்ளிகளை திறக்கலாம் என்றால், கொரோனா அச்சம் காரணமாக, தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோருக்கு ஒருவித பயப்படுவதாக இருப்பதாக அரசுக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, தற்போதைய சூழலில் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர் தயாராக இருக்கிறார்களா, அப்படி இதில் அவர்களுக்கு தயக்கம் இருந்தால் அதற்கான காரணங்கள் என்ன என்பன உள்ளிட்டவை குறித்து, அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அரசுப் பேருந்துகளிலும் வந்துவிட்டது paytm!!

இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.

பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆராய தமிழக அரசு ஏற்கெனவே வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. இதேபோன்று, தனியார் பள்ளி நிர்வாகிகளிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி