ஆப்நகரம்

லட்சங்களில் பயணம், கோடிகளில் வசூல் - தமிழகத்தில் களைகட்டிய பொங்கல் திருவிழா!

தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் மூலம் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ததன் மூலம் பல கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 15 Jan 2020, 9:09 am
தமிழர்கள் பொங்கல் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். போகியில் தொடங்கி தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என நான்கு நாட்கள் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Samayam Tamil Buses


உழைக்கும் மக்களின் திருநாளாக இயற்கைக்கு நன்றி சொல்லும் பெருநாளாக பொங்கலை கொண்டாடி வருகின்றனர். உழவுக்கு உதவி செய்த மாடுகளை குளிப்பாட்டி மஞ்சள் பூசி மாலையிட்டு பொங்கல் ஊட்டி மகிழ்வர்.

சீறி வரும் காளைகள்; வீரத்தோடு அடக்கும் காளையர்கள் - தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

இந்த பண்டிகையை கொண்டாடி மகிழ வெளியூர்களில் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருவர். இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கடந்த 10ஆம் தேதி முதல் நேற்று இரவு 10 மணி வரை 15 ஆயிரத்து 825 பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்றைய தினம் தைப் பொங்கல் திருநாள் என்பதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் திரளாக காணப்பட்டது.

களைகட்டும் விற்பனை, கொட்டும் பண மழை; தெறிக்கவிடும் பொங்கல் பண்டிகை!

முன்பதிவு செய்த பயணிகளின் டிக்கெட்கள் பரிசோதனை செய்த பின்னரே பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர். சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மாநகர பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன.

இதன் காரணமாக பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். சிறப்பு பேருந்துகள் மூலம் 8 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

இனிமேல் சமையல் குறிப்பு புத்தகங்களுக்கு கூட தடை வந்திடும் போல- சு.வெங்கடேசன் காட்டம்!

இதையொட்டி 2 லட்சத்து 10 ஆயிரத்து 632 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதன்மூலம் அரசுக்கு 10 கோடியே 80 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் தங்கி வேலை செய்தும், படித்தும் வருகின்றனர். இவர்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்றதால் அந்நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.

அடுத்த செய்தி