ஆப்நகரம்

தமிழக அரசின் உத்தரவால் பேரறிவாளன் செம ஹேப்பி!

தனது சகோதரியின் மகள் திருமணத்திற்காக பரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளன், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 13 Dec 2019, 7:48 am
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேர் 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
Samayam Tamil Perarivalan


இவர்களில் பேரறிவாளனும் ஒருவர். இவரை விடுவிக்க வலியுறுத்தி தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

அம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவகம்!

ஆனால் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். இந்த சூழலில் பேரறிவாளன் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்றும், அவரது சகோதரி மகள் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறி பரோல் கேட்டு தமிழக அரசிடம் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை ஏற்று பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இடையன் காடு கிராமத்தில் உள்ள வீட்டில் தங்கினார்.

இந்த சூழலில் பேரறிவாளனின் சகோதரி அன்புமணியின் மகள் செவ்வை - கௌதமன் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா கிருஷ்ணகிரியில் உள்ள தேவராஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பேரறிவாளன் உற்சாகமாக கலந்து கொண்டார்.

இந்த திருமண நிகழ்வில் பல்வேறு திரைப் பிரபலங்களும் பங்கேற்றனர். கடந்த 28 ஆண்டுகளாக பேரறிவாளன் எந்தவொரு சுப நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த சூழலில் தனது சகோதரி வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டார்.

பிறந்தநாள் அதுவுமா ரஜினி செஞ்ச காரியத்த பாருங்க ஃப்ரண்ட்ஸ்!

இவரது பரோல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதற்கிடையில் தந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதால் மேலும் ஒருமாதம் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று தாயார் அற்புதம்மாள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக் கொண்டு மேலும் ஒருமாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அற்புதம்மாள், பேரறிவாளன் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா : அதிமுகவுக்கு எதிராக ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு !!

அடுத்த செய்தி