ஆப்நகரம்

பொன் மாணிக்க வேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றிய பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தொடரப்படும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு திங்கள் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

Samayam Tamil 5 Dec 2019, 12:19 pm
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பொன் மாணிக்கவேல் வழக்கு ஆவணங்களை உச்சநீதிமன்ற உத்தரவுபடி திரும்ப கொடுக்க மறுத்து வருவதாகவும், அவர் நினைக்கும் பொழுது ஆவணங்களை ஒப்படைப்பதாக தெரிவித்ததாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதனால் புதிதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பொன்மாணிக்கவேலுக்கு எதிராக செய்யப்போவதாகவும் வலியுறுத்தப்பட்டது.
Samayam Tamil பொன் மாணிக்க வேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு


ஐ.ஜி. முதல் சிறப்பு அதிகாரி வரை.. அவுட் ஆப் ஃபோகஸ் ஆன பொன். மாணிக்கவேல்...

இந்த கோரிக்கைகளுக்கு கடும் ஆட்சேபனையும் எதிர்ப்பும் தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜிஎஸ் மணி வாதிட்டார். நேற்றையதினம் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி அவர்கள் ஊடகங்களை அழைத்து பொன்மாணிக்கவேல் நேற்று மாலைக்குள் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

பொன் மாணிக்கவேலுக்குப் பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி இவர்தான்...? யார் இவர் ?

சட்ட விதிகளின்படி பொன்மாணிக்கவேலுக்கு 30 நாட்கள் கால அவகாசம் இருக்கிறது என்றும் பொன்மாணிக்கவேல் எந்த இடத்திலும் ஆவணங்களை திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லவில்லை என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதில் யாருக்கும் எந்த ஆட்சேபனை இல்லை என்றும் வழக்கை சந்திக்க தயார் என்றும் வாதிட்டார்.

அதே போல் தங்கள் தரப்பிலும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு, மறு சீராய்வு மனு தாக்கல் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் அந்த அனைத்து வழக்குகளையும் வரும் திங்கள்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தனர்.

சிலை கடத்தல் ஆவணங்களை பொன். மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும்.! - உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

இந்நிலையில் இன்று (டிசம்பர் 5) ஏடிஜிபி அபய் குமார் சிங் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஐஜி அன்பு, காவல்துறை எஸ்.பி.க்கள், டிஎஸ்பிக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி