ஆப்நகரம்

ஊரடங்கில் இதற்கெல்லாம் அனுமதி: தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 14 Oct 2021, 4:19 pm
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் அக்டோபர் 30 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு அதிரடியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார்.
Samayam Tamil tn nursery school open


இன்று முதல் அனுமதி

*அந்த வகையில் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அனைத்து நாள்களிலும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

*உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இரவு 11 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

*தனிப்பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் இன்று முதல் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

திமுகவுக்கு டெல்லி வைக்கும் செக்: என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

நவம்பர் 1 முதல் அனுமதி

*மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள் நவம்பர் 1 முதல் அனுமதி

*தனியார் நிறுவனங்கள் பொருட்காட்சிகளை நடத்த நவம்பர் 1 முதல் அனுமதி வழங்கப்படுகிறது.

*ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

*நவம்பர் 1 முதல் மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தீபாவளி பண்டிகை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்த குட் நியூஸ்!
*திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 100 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

*இறப்பு நிகழ்ச்சிகளுக்கு 50 பேர் வரை பங்கேற்க அனுமதி

தடை

திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த, மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடை தொடர்கிறது.

அடுத்த செய்தி