ஆப்நகரம்

பழனி அருகே அகழ்வாராய்ச்சி நடத்தப்படுமா? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

பழனி அருகே பாடியூரில் அகழ்வாராய்ச்சி நடத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Sep 2022, 4:05 pm
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாடியூரில் அகழ்வாராய்ச்சி நடத்த கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு உரிய பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil madurai court


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியை சேர்ந்த நாரயணமூர்த்தி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்

அதில், "பழனி அருகே உள்ளது பாடியூர் கிராமம். இங்கு ஒரு பழமையான மணல் மேடு இருந்தது. அகழ்வாராய்ச்சியில் ஆர்வம் கொண்ட நாங்கள், 2017 ம் ஆண்டு 30 அடி ஆழத்திற்கு தோண்டி பார்த்தோம். அப்போது அங்கு மண்பாண்டங்கள், சுடுமண் பொம்மைகள், முதுமக்கள் தாழிகள், மனித எலும்புகள் உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. 3 முதல் 4 ஏக்கர் வரை உள்ள இந்த மணல் மேட்டை தகர்த்து அரசு மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் பழமையான இடத்தை தகர்த்தி கட்டிடம் கட்டியுள்ளது வேதனை அளிக்கிறது. தற்போது இந்த பகுதியில் ஏக்கர் மண் மேடு மட்டுமே எஞ்சியுள்ளது.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்: கலைஞர் எடுத்த நடவடிக்கை - நினைவு கூர்ந்த ஸ்டாலின்
இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் மிகவும் பழமையானவை. சங்ககாலத்தை சேர்ந்தவை. சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களுக்கு ஒப்பானவை. எனவே திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாடியூரில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கும். எனவே இங்கு மத்திய, மாநில அரசுகள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில் நீதிபதிகள், இதுகுறித்து உரிய பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி