ஆப்நகரம்

பிப்ரவரி 27ஆம் தேதி விடுமுறை: தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 13 Feb 2023, 2:52 pm
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 27ஆம் தேதி தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
Samayam Tamil tn govt


ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பிப்ரவரி 27ஆம் தேதி அங்கு இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 7ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.


பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? நெடுமாறன் பின்னணியில் யார்? மீண்டும் தமிழர்களுக்கு தலைவலி!

தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 4 பெண் வேட்பாளர்கள் அடங்குவார்கள்.

பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியாகும்.

இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வகை செய்யும் வகையில் தமிழக அரசு பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் அங்குள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு - மருமகனை அனுப்பிய ஸ்டாலின் - பின்னணியில் என்ன சாதி கணக்கு?

அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டுள்ளார், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி