ஆப்நகரம்

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி நிறுத்தம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை தமிழக அரசு நிறுத்திவைத்துள்ளது.

Samayam Tamil 27 Apr 2020, 4:13 pm
சென்னை: மத்திய அரசை தொடர்ந்து தமிழகத்திலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை நிறுத்திவைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரி கட்ட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரையிலான அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தொகையின்படி அகவிலைப்படி வழங்கப்படும் என தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்த நடவடிக்கையால் நடப்பு நிதியாண்டில் ரூ.37,350 கோடி அளவுக்கு மிச்சம் ஏற்படும் எனவும், இதே நடவடிக்கையை மாநில அரசுகள் மேற்கொண்டால் ரூ.82,566 கோடி மிச்சம் ஏற்படுவதுடன், ஒட்டுமொத்த நடவடிக்கையால் ரூ.1.20 லட்சம் கோடி அளவுக்கு சிக்கனப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் விடுப்பு சம்பளம் ரத்து; தமிழக அரசு அதிரடி உத்தரவு

இந்நிலையில், தமிழகத்திலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை தற்காலிகமாக நிறுத்திவைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுத்தம் கடந்த 2020 ஜனவரி மாதத்தில் இருந்து 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தொகையின்படி அகவிலைப்படி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி நிறுத்தம் உத்தரவு

அகவிலைப்படி நிறுத்தம் உத்தரவு


முன்னதாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது அனைத்து அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழங்கள், வாரியங்கள், கமிஷன்கள், கூட்டுறவுகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அனுப்பப்பட்ட கோரிக்கைகள், நிலுவையில் உள்ள பில்கள் எதுவும் செயல்படுத்தப்பட மாட்டது எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி