ஆப்நகரம்

ஸ்டொ்லைட் ஆலைக்கு தமிழக அரசு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது – ஆலை நிா்வாகம்

அரசியல் காரணங்களுக்காக ஆலை தரப்பில் தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட கோாிக்கைகள் ஏற்கப்படவில்லை என்று ஸ்டொ்லைட் நிா்வாகம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Feb 2019, 11:17 am
ஸ்டொ்லைட் ஆலைக்கு தமிழக அரசு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளதாக ஆலை நிா்வாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
Samayam Tamil Sterlite Factory


ஸ்டொ்லைட் ஆலையை உடனடியாக திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு ஆலை நி்ாவாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது தொடா்ச்சியா இருதரப்பு விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நீதிபதிகள் ஆா்.பாலி நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு நேற்று மூன்றாவது நாளாக விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் பொது தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், “ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறும் சமயங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதனை சரிசொய்யுமாறு சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. அப்போது, அவசர கோலத்தில் ஏதோ சில நடவடிக்கைகளை எடுத்து தற்காலிகமாக நிலைமையை ஆலை நிர்வாகத்தினர் சமாளித்து வருகின்றனர். தொடர்ந்து இவ்வாறு செய்வதை அனுமதிக்க முடியாது” என்று தொிவிக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து ஆலை நிா்வாகம் சாா்பில் பேசுகையில், “ஸ்டொ்லைட் ஆலைக்கு தமிழக அரசு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை, ஆலை மூடப்பட்டு 6 மாதங்களுக்கு பின்னா் எடுக்கப்பட்டதாகும். கந்தக அமிலம் கசிவு ஏற்படும் எனவும், இதனை தவிா்க்க ஆலையில் தினசரி பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆலை நிா்வாகம் தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை, அரசியல் நோக்கத்திற்காக தமிழக அரசு ஏற்கவில்லை” என்று பதில் அளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை பிப்ரவரி 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

அடுத்த செய்தி