ஆப்நகரம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு- வாரி வழங்கிய தமிழக அரசு!

தமிழக சட்டமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர் தங்கமணி, டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து உத்தரவிட்டார்.

Samayam Tamil 4 Jul 2019, 4:39 pm
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த மாத இறுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இறுதியாக துறை சார்ந்த புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது.
Samayam Tamil TASMAC


அதன்படி, இன்று மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையில் அமைச்சர் தங்கமணி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மாதத் தொகுப்பு ஊதியம் முறையே மாதந்தோறும் ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும். ஊதிய உயர்வு காரணமாக ஆண்டிற்கு ரூ.62.53 கோடி அரசுக்கு கூடுதலாக செலவு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

புதிய ஊதிய உயர்வு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இந்த ஊதிய உயர்வால் 36,056 ஊழியர்கள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி