ஆப்நகரம்

தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல் - தமிழக அரசுக்கு விடுத்த அறிவுரை!

டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஒட்டி, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Sep 2019, 6:56 am
கடலூர் மாவட்டத்தில் 100க்கும் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Dengue


இதையடுத்து அவர்களை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு வரும் காய்ச்சல் பாதித்த நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளத்தோனியில் வந்த இலங்கை வாலிபர் தனுஷ்கோடியில் கைது!

சென்னை மற்றும் புறநகரில் இருந்து நாள்தோறும் சராசரியாக 4 பேர் டெங்கு அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர். டெங்குவால் இறப்பு இல்லாத நிலையை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தால் ரத்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அரசுடன் பொதுமக்களும் கைகோர்த்து செயல்பட்டால், டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, தமிழகம் முழுவதும் தொற்று நோய் பரவாமல் தடுக்க உள்ளாட்சித் துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து செயல்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய அளவு மருந்துகள் உள்ளன.

காவேரி கூக்குரல் இயக்கத்துக்கு கர்நாடக அரசு முழு ஆதரவு- முதல்வர் எடியூரப்பா!

சென்னை மாநகராட்சியில் 3,346 பேர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார். சென்னையில் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. ஏடிஎஸ் கொசுக்களை அழிக்க புகை பரப்பு கொசு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன. 10 மில்லி லிட்டர் நன்னீர் இருந்தாலே ஏடிஎஸ் கொசுக்கள் முட்டையிட்டு விடும். எனவே இத்தகைய வீடுகள், தொழிற்சாலைகள், பொது இடங்களில் நன்னீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதேபோல் பொதுமக்களும் தங்கள் வீடுகளில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்- பேரறிவாளனின் தாய் உருக்கமான ட்வீட்!

அடுத்த செய்தி