ஆப்நகரம்

இயற்கையை துளிர்விடச் செய்யும் ஆச்சரிய விநாயகர்- நீங்களே பாருங்க...!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழக அரசு விதை விநாயகர் என்ற பெயரில் சிலைகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

Samayam Tamil 1 Sep 2019, 3:39 pm
நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஏராளமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, விற்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் பூஜைகள் செய்யப்பட்டு, விழா முடிந்தவுடன் நீரில் கரைக்கப்படும்.
Samayam Tamil Vinayagar


இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வகையில் இருக்கின்றன. இதற்காக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக தமிழக அரசு சார்பில் விதை விநாயகர் தயாரிக்கப்பட்டு, இம்முறை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.! இனி இந்த குற்றத்திற்கு இவ்வளவு அபராதம்

இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், விநாயகர் சிலையை வைத்து புதுவிதமான முயற்சி மேற்கொண்டது தெரிகிறது. அதாவது, பார்சல் ஒன்று திறக்கையில், அதில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை இருக்கிறது.

அதனுடன் கவர் ஒன்றில் விதைகளும் உள்ளன. மேலும் குறிப்பு சீட்டு ஒன்றும் இருக்கிறது. கவரில் என்ன விதை இருக்கிறது என்பதை, குறிப்பு சீட்டில் தெரிவித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி முடிந்த உடன் ஒரு தொட்டி எடுத்து, அதில் சிலையை வைத்து தண்ணீர் ஊற்றி கரைத்து விட வேண்டும்.

தெலங்கானா ஆளுநர் ஆகிறார் தமிழிசை சௌந்தரராஜன்..!

இதனுடன் கொடுக்கப்பட்ட விதைகளை போட்டு விட வேண்டும். இதற்கடுத்த 2 அல்லது 3 நாட்களில் விதை துளிர்க்க ஆரம்பித்துவிடும். அதன்பிறகு செடியாகவோ அல்லது மரமாகவோ வளரத் தொடங்கிவிடும்.

இவ்வாறு விநாயகரை கரைத்து, அந்த மண்ணை வீணடித்து விடாமல், இதுபோன்று செடி வளர உபயோகப் படுத்துவது மிகவும் சிறப்பான ஒன்று என விவசாயிகள் கருதுகின்றனர். இதற்காக விதைகளுடன் கூடிய பிள்ளையார்கள், இம்முறை விற்பனைக்கு வந்துள்ளனர்.

மீண்டும் துளிர் விடும் அமமுக கட்சி.! 19 புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தார் டி.டி.வி

அடுத்த செய்தி