ஆப்நகரம்

தமிழக பட்ஜெட்டில் ஆச்சரியம்?- அதுவும் பள்ளி குழந்தைகளுக்கு; எகிறிய எதிர்பார்ப்பு!

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 13 Feb 2020, 7:53 am
தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதை ஊக்கப்படுத்தவும், ஏழை, எளியவர்கள் பயன்பெறும் வகையிலும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டம், காமராஜர் ஆட்சி காலத்தில் மதிய உணவு திட்டமாக மாநிலம் முழுவதும் கொண்டு வரப்பட்டது.
Samayam Tamil TN Assembly


எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சத்துணவு திட்டமாக மாறியது. கருணாநிதி ஆட்சி காலத்தில் சத்துணவுடன் முட்டையும் வழங்கும் முறை தொடங்கியது. தமிழகத்தில் தற்போது 43 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுகிறது. இதன்மூலம் 49.85 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு: புதிய கலந்தாய்வு தேதி அறிவிப்பு

இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சூழலில் சென்னை மாநகராட்சியில் உள்ள 320 பள்ளிகளில் ”காலை உணவு திட்டம்” தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் 85 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் படி இட்லி, தோசை, பொங்கல், உப்புமா உள்ளிட்ட உணவுகள் காலையில் வழங்கப்படுகின்றன.

சென்னையில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், இதனை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பு நாளை தாக்கல் செய்யபப்டும் 2020-21ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்தக் கூடும் என்றும், 65 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவர் என்றும் கூறப்படுகிறது.

செம... அப்துல் கலாமை எப்படிலாம் கொண்டாடுறாங்க பாருங்க...

இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் கடந்த வாரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதற்காக 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்படுகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை ஆகியவற்றிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த காலை உணவு திட்டத்தில் தமிழகத்தின் பாரம்பரிய பச்சைப் பயிறு, கேழ்வரகு அடை, குதிரைவாலி, சாமைக் கஞ்சி, கொண்டைக் கடலை போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கவும் திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது. எப்படியோ தமிழக மாணவர்கள் காலையில் தெம்பாக கல்வி கற்றால் நல்லது தான். அதேசமயம் இந்த திட்டத்தில் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல், குளறுபடிகளும் நடக்காமல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நன்றாகத் தான் இருக்கும்.

அடுத்த செய்தி