ஆப்நகரம்

ஓய்வு பெறும் மருத்துவ பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு

கொரோனா காரணமாக ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி நீட்டிப்பு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

Samayam Tamil 31 Mar 2020, 5:08 pm
சென்னை: ஓய்வு பெறும் மருத்துவ பணியாளர்களை பணி நீட்டிப்பு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன் முக்கிய அங்கமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசின் வழிகாட்டுதல்களையும் தாண்டி கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர ஏராளமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படியும், தனிநபர் சுகாதாரத்தை பாதுகாக்கும்படியும் அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் 24 மனி நேரமும் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சுகாதார பணியாளர்களுக்கு ஒரு மாத கால சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை கேட்டு டார்ச்சர் செய்ய கூடாது: ஹவுஸ் ஓனர்களுக்கு தமிழகர அரசு உத்தரவு

இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு பணிக்காக காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் அரசு மருத்துவமனைகளில் 1,508 லேப் டெக்னீசியன், 530 மருத்துவர்கள் மற்றும் 1000 செவிலியர்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் உரிய விதிகளுக்கு உட்பட்டு நியமிக்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு உத்தரவு


இந்நிலையில், ஓய்வு பெற்ற மருத்துவ பணியாளர்களை பணி நீட்டிப்பு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “மார்ச் 31ஆம் தேதியுடன் (இன்று) மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்கு பின் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர தற்காலிக பணி நியமன ஆனை வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி