தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் 10ஆம் தேதி காலை 4 மணி முதல் 24ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் அத்தியாவசிய சேவைகள் நண்பகல் 12 மணி வரை கிடைக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து, வாடகை டாக்சி, ஆட்டோக்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. அனைத்து தனியார் அலுவலகங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கிற்கு மக்கள் தயாராகும் வகையில் இன்றும், நாளையும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும், நிறுவனங்களும் இயங்கும். தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகளுக்கு அனுமதி என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் வெளியூர்களில் வேலை செய்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பும் வகையில் இன்றும், நாளையும் 24 மணி நேரமும் அரசு பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று இரவும், நாளை இரவும் ஏராளமானோர் பேருந்துகளில் பயணம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தனிநபர் இடைவெளி என்ற கட்டுப்பாடு மீறப்படலாம் என்று தெரிகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு தேவைப்படும் இடங்களில் பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மிகத் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும். தேவைக்கு ஏற்ப சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதேபோல் வெளியூர்களில் வேலை செய்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பும் வகையில் இன்றும், நாளையும் 24 மணி நேரமும் அரசு பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று இரவும், நாளை இரவும் ஏராளமானோர் பேருந்துகளில் பயணம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தனிநபர் இடைவெளி என்ற கட்டுப்பாடு மீறப்படலாம் என்று தெரிகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு தேவைப்படும் இடங்களில் பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மிகத் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும். தேவைக்கு ஏற்ப சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.