ஆப்நகரம்

தமிழகத்தில் ஷிப்ட் முறையில் பள்ளிகளை இயக்கத் திட்டம்!!

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகளை திறக்கவும், ஷிஃப்ட் முறையில் வகுப்புகளை நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 27 May 2020, 8:31 pm
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மார்ச் 16 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
Samayam Tamil school shft


இதன் காரணமாக, தமிழகத்தில் மார்ச் மாதம் 24 ஆம் தேதி தொடங்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுகள் ஜூன் 15 ஆம் தேதி தொடங்கி ஜூன் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள், மேல்நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை ஆகியவற்றை முடித்து, ஆகஸ்ட் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

10, 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களது ஊரிலேயே தேர்வு எழுதலாம் - அரசு அதிரடி

இவ்வாறு பள்ளிகள் திறக்கப்படும்போது 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை ஷிஃப்டிலும், 9 வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு மாலை ஷிஃப்ட்டிலும் வகுப்புகளை நடத்தவும் பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், எல்கேஜி முதல் 5 ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் வகுப்புகளை ஆரம்பிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்த அறிவிப்பு குறித்த நேரத்தில் வெளியாகும் என்றும் பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? - மத்திய அரசின் திட்டம் என்ன?

அமைச்சர் விளக்கம்: இதனிடையே, தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, "பள்ளிகள் திறப்பு விஷயத்தில் பிற மாநிலங்கள் எடுத்துவரும் முடிவுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

இதுதொடர்பாக ஆலோசனை வழங்க, உயர்நிலைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி