ஆப்நகரம்

கொரோனாவுக்கு மல்லுக்கட்டும் தமிழக அரசு..! செவிலியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள கூடுதலாக 2,570 செவிலியர்களை பணியிலமர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 8 May 2020, 3:58 pm
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்த கூடுதல் செவிலியர்களை பணியிலமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில், பன்முக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Samayam Tamil செவிலியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு


இதன் ஓர் அங்கமாக மருத்துவ பணியாளர்கள் தேர்வு மூலம் ஏற்கெனவே 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பனர்கள் மற்றும் 2715 சுகாதார ஆய்வாளர்களை பனியமர்த்தி சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரியில் விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிதி - தமிழக அரசு

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் இன்னும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை விரட்ட கூடுதலாக 2570 செவிலியர்களை பணியில் அமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்கள் 6 மாத காலம் ஒப்பந்த முறையில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, 5409 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் சென்னையில் 2281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மொத்தம் 1547 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 3822 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி