ஆப்நகரம்

இளைஞர்களுக்கு இப்படியொரு வேலைவாய்ப்பா? உதவும் மாநில அரசு; வழிகாட்டிய அமைச்சர் ஜெயக்குமார்!

சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்கு வாய்ப்பளிக்கும் வகையில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 17 Jul 2019, 3:44 pm
தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் பல்வேறு துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டு, உரிய விளக்கம் அளிக்கின்றனர்.
Samayam Tamil Minister Jayakumar


மேலும் புதிய அறிவிப்புகளையும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய கூட்டத்தின் போது, எங்கள் தொகுதியில் வண்ண மீன் விற்பனை மையம் அமைக்கப்படுமா என்று சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். வண்ண மீன்கள் வளர்ப்பு என்பது ஒரு லாபகரமான தொழில். சர்வதேச அளவில் 125 நாடுகளில் வண்ண மீன்கள் ஏற்றுமதி நடக்கிறது.

நீட் விலக்கு விவகாரத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும் - முதல்வர் பழனிசாமி உறுதி!

நமது நாட்டில் ரூ.300 கோடி அளவிற்கு அலங்கார மீன்கள் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. இளைஞர்கள், தனியார் நிறுவனங்கள் அலங்கார மீன் வளர்ப்பு தொழிலுக்கு வந்தால் தமிழக அரசு ஊக்கம் அளிக்கும்.

ஆவின் பாலகங்கள் எங்கு, எப்படி தொடங்குவது? சட்டமன்றத்தில் விளக்கிய பால்வளத்துறை அமைச்சர்!

இது சுய வேலைவாய்ப்பு அடிப்படையில் இளைஞர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று கூறினார்.

ஆத்தூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய சுகாதார மாவட்டம் - முதல்வர் பழனிசாமி!
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்