சென்னை: பரபரப்பான தமிழக அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வரவுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதேபோல், அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பொறுப்பேற்றார். இதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராகவும் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சசிகலா தேர்வையடுத்து, தனது முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அடுத்த முதல்வர் பதவியேற்கும் வரை, பணிகளை பன்னீர்செல்வம் கவனித்துக் கொள்ள வேண்டும் என பணித்திருந்தார்.
இதனிடையே, அதிமுக தலைமை மீது அதிருப்தி தெரிவித்த பன்னீர்செல்வம், கட்டாயத்தின் பேரில் ராஜினாமா செய்தேன் என்றார். மேலும், மக்கள், தொண்டர்கள் விருப்பப்பட்டால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன் என்றும் கூறினார்.
அதேசமயம், ஆளுநரும் தமிழகம் வராத காரணத்தால் சசிகலா பதவியேற்பில் இழுபறி நிலவியது. இதனால், மத்திய அரசின் தலையீடு உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வரவுள்ளார். இதனால், சாசிகளா பதவியேற்பு இன்றைய தினமே நிகழுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முன்னதாக, சஅதிமுக ட்டப்பேரவைக் குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதும், பதவியேற்பு நிகழ்ச்சி பிப்ரவரி 9-ம் தேதியன்று (இன்று) நடைபெறும் என தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu Governor C Vidyasagar Rao to reach Chennai today
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதேபோல், அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பொறுப்பேற்றார். இதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராகவும் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சசிகலா தேர்வையடுத்து, தனது முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அடுத்த முதல்வர் பதவியேற்கும் வரை, பணிகளை பன்னீர்செல்வம் கவனித்துக் கொள்ள வேண்டும் என பணித்திருந்தார்.
இதனிடையே, அதிமுக தலைமை மீது அதிருப்தி தெரிவித்த பன்னீர்செல்வம், கட்டாயத்தின் பேரில் ராஜினாமா செய்தேன் என்றார். மேலும், மக்கள், தொண்டர்கள் விருப்பப்பட்டால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன் என்றும் கூறினார்.
அதேசமயம், ஆளுநரும் தமிழகம் வராத காரணத்தால் சசிகலா பதவியேற்பில் இழுபறி நிலவியது. இதனால், மத்திய அரசின் தலையீடு உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வரவுள்ளார். இதனால், சாசிகளா பதவியேற்பு இன்றைய தினமே நிகழுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முன்னதாக, சஅதிமுக ட்டப்பேரவைக் குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதும், பதவியேற்பு நிகழ்ச்சி பிப்ரவரி 9-ம் தேதியன்று (இன்று) நடைபெறும் என தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu Governor C Vidyasagar Rao to reach Chennai today