சசிகலா முதல்வராக பதவியேற்க அதிமுக தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வரும் சூழலில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை, முதல்வராக தேர்வு செய்யவும், அக்கட்சியின் சட்டப்பேரவை தலைவராகவும் தேர்வு செய்து, அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழிமொழிய மற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏகபோக ஆதரவு அளித்தனர்.
இதையடுத்து, சசிகலா முதல்வராக நியமிக்கப்படுவதற்கான பணிகளை அதிமுக தொடங்கியுள்ளது. அவரது பதவியேற்பு விழா, சென்னை பல்கலைக்கழக அரங்கில் நடைபெறவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், திடீரென அரசியல் சிக்கல் எழுந்துள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் வித்யா சாகர் ராவ், அதற்கடுத்தப்படியாக, உடனே டெல்லி புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால், அவரை சசிகலா நேரில் சந்தித்து, ஆட்சியமைப்பதற்கான அனுமதி கோர முடியாத சூழல் எழுந்துள்ளது.
எப்போது வேண்டுமானாலும், ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை திரும்பலாம் எனக் கூறப்பட்டாலும், அவர் பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களின் ஆலோசனைப்படி, ஆளுநர் தொடர்ந்து டெல்லியிலேயே தங்கியுள்ளார்.
தற்போதைய சூழலில், அனைவருமே சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் உச்சநீதிமன்ற எதிர்ப்பை எதிர்பார்த்துள்ளனர். இந்த தீர்ப்பை பொறுத்தே சசிகலாவுக்கு, அனுமதி வழங்கலாமா, இல்லையா என, ஆளுநர் உள்ளிட்டோர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், வித்யசாகர் ராவ், தற்போதைக்கு சென்னை திரும்பமாட்டார் என்றும், சசிகலா பதவியேற்பது தள்ளிப்போகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா பதவியேற்பு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக, டுவிட்டரில் பதிவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu governor Vidyasagar Rao still in Mumbai, will not be going to Chennai: Sources
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை, முதல்வராக தேர்வு செய்யவும், அக்கட்சியின் சட்டப்பேரவை தலைவராகவும் தேர்வு செய்து, அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழிமொழிய மற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏகபோக ஆதரவு அளித்தனர்.
இதையடுத்து, சசிகலா முதல்வராக நியமிக்கப்படுவதற்கான பணிகளை அதிமுக தொடங்கியுள்ளது. அவரது பதவியேற்பு விழா, சென்னை பல்கலைக்கழக அரங்கில் நடைபெறவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், திடீரென அரசியல் சிக்கல் எழுந்துள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் வித்யா சாகர் ராவ், அதற்கடுத்தப்படியாக, உடனே டெல்லி புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால், அவரை சசிகலா நேரில் சந்தித்து, ஆட்சியமைப்பதற்கான அனுமதி கோர முடியாத சூழல் எழுந்துள்ளது.
எப்போது வேண்டுமானாலும், ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை திரும்பலாம் எனக் கூறப்பட்டாலும், அவர் பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களின் ஆலோசனைப்படி, ஆளுநர் தொடர்ந்து டெல்லியிலேயே தங்கியுள்ளார்.
தற்போதைய சூழலில், அனைவருமே சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் உச்சநீதிமன்ற எதிர்ப்பை எதிர்பார்த்துள்ளனர். இந்த தீர்ப்பை பொறுத்தே சசிகலாவுக்கு, அனுமதி வழங்கலாமா, இல்லையா என, ஆளுநர் உள்ளிட்டோர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், வித்யசாகர் ராவ், தற்போதைக்கு சென்னை திரும்பமாட்டார் என்றும், சசிகலா பதவியேற்பது தள்ளிப்போகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா பதவியேற்பு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக, டுவிட்டரில் பதிவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu governor Vidyasagar Rao still in Mumbai, will not be going to Chennai: Sources