ஆப்நகரம்

இனிப்பான பொங்கல் பரிசு: தமிழக மக்களுக்கு அடுத்த ஹேப்பி நியூஸ்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

Samayam Tamil 30 Dec 2020, 11:28 am
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி, ஆளுங்கட்சியான அதிமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த சூழலில் பொங்கல் பரிசுத் தொகையை இரண்டரை மடங்கு அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது பேசுபொருளாக மாறியது. இது தமிழக மக்களை பெரிதும் ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம். இருப்பினும் இதற்கான பலன்கள் கிடைக்குமா என்றால் அதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக தமிழக அரசு 5,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
Samayam Tamil TN Pongal Gift


இதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு நீளக் கரும்பு அடங்கும். இதனைப் பெறுவதற்கு கடந்த 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

நான் போகிறேன்; வரமாட்டேன் - தமிழருவி மணியன் பரபரப்பு அறிக்கை!
இந்த காலகட்டத்தில் பொங்கல் பரிசு பெறத் தவறியவர்கள், ஜனவரி 13ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் ரேஷன் கடை ஊழியர்கள் சம்பள உயர்வு விவகாரத்தில் போர்க்கொடி பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சில இடங்களில் டோக்கன் கொடுக்கும் போது ஏற்பட்ட தகராறு சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகை வழங்க தேவையான நிதி, மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் வரும் ஜனவரி 12ஆம் தேதிக்குள் அனைவருக்கும் பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பை வழங்கி முடித்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது: ரஜினி பற்றி கஸ்தூரி
பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஒரு கோடியே 80 லட்சம் வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக தமிழக அரசு சார்பில் 484 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி